search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகுப்பூதியம் உயர்வு"

    தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.7,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #JactoGeo
    சென்னை:
     
    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் குறிப்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    வேலை நிறுத்தத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 2 ஆசிரியர்களே உள்ளனர். அவர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 



    இதையடுத்து, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அளிக்க முடிவானது. 

    இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. #JactoGeo
    ×